என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஏர்வாடி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
ராமநாதபுரம்:
ஏர்வாடி அருகே உள்ள கிழக்கு மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). மீனவரான இவர் தனது மனைவி, மகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிம்னி விளக்கை எரியவிட்டு வேலுச் சாமி தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது சிம்னி விளக்கு சரிந்து விழுந்து குடிசையில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. வெப்பம் தாக்கியதில் திடுக்கிட்டு எழுந்த வேலுச்சாமி அலறியடித்து குடும்பத்தினரை வெளியேற்றினார்.
காற்றும் பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் வீட்டில் இருந்த மீன்பிடி வலை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகை, எல்.ஐ.சி. பத்திரம் 2 மற்றும் ஆடைகள், பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
தீ விபத்து குறித்து ஏர்வாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்