search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடு தீ"

    பெருந்துறை அருகே தீப்பிடித்து குடிசை வீடு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 60).

    இவர் அந்த பகுதியில் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறார். கூலித் தொழிலாளி. நேற்று மாலை வீட்டில் இருந்த சுவிட்ச் பாக்சில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் மேற் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதனைக்கண்ட முனியம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த பேன், டிவி, பொருட்கள் மற்றும் ரேசன் கார்டு உள்பட ஆவணங்கள் அனைத்தும் எரிந்தது.

    ×