search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவக்குறிச்சி அருகே கார் மோதி விவசாயி பலி
    X

    அரவக்குறிச்சி அருகே கார் மோதி விவசாயி பலி

    அரவக்குறிச்சி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65), விவசாயி. இவர் தனது மொபட்டில் தண்ணீர் எடுத்துவிட்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதே சாலையில் சேலத்தில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார் செல்லப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அரவக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த செல்லப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தினை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சேலம் மாவட்டம் பொன்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரெங்கநாதன் (23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×