search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை
    X

    மதுரை அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை

    மதுரை அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது 68). இவர் நேற்று கே.கே. நகர் எல்.ஐ.சி. நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை 2 டிப்-டாப் ஆசாமிகள் மறித்தனர்.

    தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்தி கொண்ட அவர்கள் நகை பறிப்பு சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் கழற்றி தாருங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.

    இதை நம்பிய சங்கரம்மாளும் தான் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். அப்போது மர்ம ஆசாமிகள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகைக்கு பதிலாக கூழாங்கற்களை பேப்பரில் மடித்து கொடுத்தனர். இதையறியாத சங்கரம்மாளும் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது நகைக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×