என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொன்னேரியில் புதிதாக திறந்த மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் மறியல்
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள தேவராஞ்சேரி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பக்கப்பட்து.
இதற்கு சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சின்னக்காவனம், பெரியகாவனம், மகணடிகை, லெட்சுமிபுரம், ஏறுசிவன் பெரும்பேடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சின்னக்காவனம்- பெரும் பேடுசாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னேரி போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மதுக்கடை மூடப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவிகள், பெண்கள் இருசக்கர வானங்களிலும், நடந்தும் செல்லும் சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
போதை ஆசாமிகளால் பெண்கள் கேலி, கிண்டல் செய்யப்படுகிறார்கள். மேலும் சாலையில் குடித்து விட்டு அங்கே பாட்டிலை உடைக்கின்றனர். குற்றச் செயல்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எங்கள் பகுதியில் மதுக்கடை வேண்டாம்’ என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்