search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மறியல்"

    • குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கூனிபாளையம் காலனி. இங்கு சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 4 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் நீர்வற்றி விட்டதால் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியினருக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சீதஞ்சேரி -பெண்ணாலூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மற்றும் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரகு ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடைக்கு தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருகின்றனர்.

    இந்தநிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்லடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன், நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

    ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள இந்த மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளேன். மேலும் தமிழக அரசு 500 மதுபான கடைகளை அகற்றுவதாக அறிவித்து விட்டு வியாபாரம் குறைவாக உள்ள மதுபான கடைகளை மட்டுமே மூடி உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு எம்.எல்.ஏ.,காரை நோக்கி சென்ற போது அவரை சூழ்ந்து கொண்ட குடி மகன்கள் சிலர், மதுபான கடையை மூடக்கூடாது.நகரபகுதியில் இந்தக்கடை மட்டுமே உள்ளது. எனவே இங்கிருந்து மதுபான கடையை மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பழுதடைந்த சிறிய அளவிலான குடிநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு அங்கு புதிய நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.

    இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறி அதிகாரிகள் கட்டுமான பணிக்கு தடை விதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வாழைத்தோப்பு பகுதியில் வசிக்கும் பெண்கள் நேற்று மதியம் ஊட்டி நெடுஞ்சா லையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்ப ட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி செல்வராஜ் மற்றும் கூடலூர் ஊரா ட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறை ஏன் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மாவட்ட கலெக்டர் மூலம் உரிய அனுமதி பெற்று குடிநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சாலைமறியல் கைவிடப்ப ட்டது.

    இதற்கிடையே கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைலர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் தேவிமோகன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் உத்தமன் தலை மையில வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு வந்து மாவட்ட கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர்.

    • ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சு வார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.

    அதன்படி இன்று காலை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வழக்கம் போல் அத்திகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தட்டி கேட்ட பெண்களை அவர் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், காலை 10 மணி அளவில் வேலையை புறக்கணித்து திருப்பத்தூரில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலைக்கு வந்தனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இருப்பினும் அவர்கள், ஆபாசமாக பேசிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது.
    • குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ளது அகூர் கிராமம். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மேல் நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. கடந்த 20-நாட்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். குடிநீரை கடைகளில் கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

    தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி.சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சமையல் செய்வதற்கு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுடன் இன்றுகாலை பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இறுதியாக ஒரு வழியாக பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சந்தித்து ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என உறுதி அளித்து சமாதானப்படுத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.
    • ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி. இவரது கணவர் காளிதாஸ் (45). சூளைமேனி கிராம எல்லையில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

    வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.

    இதனை ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் காளிதாஸ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் காளிதாஸ் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவரது மனைவியும் ஊராட்சி தலைவியுமான சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சூளைமேனியில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.

    வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது.
    • காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகர் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புரு ஷோத்தமன் தலைமையில் காட்டூர் ெரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சரவணம்பட்டி,

    கோவை மாநகராட்சி 31 -வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் மற்றும் 31 -வது வார்டு கவுன்சிலர் வைரமுருகன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ், கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.
    • கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைக்கப்படுகிறது. இது 133 கி.மீ. நீளத்தில் அமைய உள்ளது.

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய இருக்கிறது.

    இதில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் திருவள்ளூர் அடுத்த கீழானூர் கிராமத்தில் சாலையில் தடுப்பு அமைத்து சாலையை உயர்த்தி பணி நடைபெற்று வருகிறது. இதனால் கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து விவசாய நிலத்துக்கும், குடியிருப்பு பகுதிக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் பணி நடந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கீழானூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல புதிதாக அமைக்கும் சாலையில் வழி கேட்டு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×