என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் அதிகாலை நேரத்தில் மதுவிற்ற ஊழியருடன் இளம்பெண் வாக்குவாதம்
Byமாலை மலர்27 Feb 2019 10:31 AM GMT (Updated: 27 Feb 2019 10:31 AM GMT)
திருப்பூரில் இன்று அதிகாலை நேரத்தில் மதுவிற்ற ஊழியருடன் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (25) இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர் அண்ணாநகரில் இருந்து பாண்டியன் நகர் செல்லும் வழியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பாருக்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த ஒரு ஊழியரிடம் மது பாட்டில் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஊழியர் இருக்கிறது. ஆனால் குவாட்டருக்கு ரூ. 50 கூடுதலாகும் என்றார்.
இதையடுத்து கவிதா திடீரென அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பகல் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்க வேண்டும். ஆனால் நீங்கள் எந்நேரமும் மது விற்பனை செய்கிறீர்கள்.
இதனால் எனது கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் காலையிலேயே மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்வதில்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காலையிலே இப்படி மது விற்றால் எப்படி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று வாக்குவாதம் செய்தார்.
இதைக்கேட்ட பார் ஊழியர் கவிதாவை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கவிதா தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியுடன் திடீரென கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் வந்தனர். போலீசார் வருவதை பார்த்த பார் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பாருக்குள் சென்று பார்த்த போது அங்கு 2 பாக்ஸ் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் கவிதா தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் திடீரென அவர் சாலையில் அமர்ந்து கொண்டார். போலீசார் அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன் எப்படி மது விற்கலாம் என்ற ஆவேசமாக கேள்வி கேட்டார்.
இதையடுத்து போலீசார் கவிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கத்தி கொண்டு வந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரின் குடிபோதையால் மனம் உடைந்த இளம்பெண் மதுபாரில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
திருப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (25) இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர் அண்ணாநகரில் இருந்து பாண்டியன் நகர் செல்லும் வழியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பாருக்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த ஒரு ஊழியரிடம் மது பாட்டில் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஊழியர் இருக்கிறது. ஆனால் குவாட்டருக்கு ரூ. 50 கூடுதலாகும் என்றார்.
இதையடுத்து கவிதா திடீரென அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பகல் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்க வேண்டும். ஆனால் நீங்கள் எந்நேரமும் மது விற்பனை செய்கிறீர்கள்.
இதனால் எனது கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் காலையிலேயே மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்வதில்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காலையிலே இப்படி மது விற்றால் எப்படி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று வாக்குவாதம் செய்தார்.
இதைக்கேட்ட பார் ஊழியர் கவிதாவை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கவிதா தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியுடன் திடீரென கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் வந்தனர். போலீசார் வருவதை பார்த்த பார் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பாருக்குள் சென்று பார்த்த போது அங்கு 2 பாக்ஸ் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் கவிதா தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் திடீரென அவர் சாலையில் அமர்ந்து கொண்டார். போலீசார் அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன் எப்படி மது விற்கலாம் என்ற ஆவேசமாக கேள்வி கேட்டார்.
இதையடுத்து போலீசார் கவிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கத்தி கொண்டு வந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரின் குடிபோதையால் மனம் உடைந்த இளம்பெண் மதுபாரில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X