என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் அருகே கொள்முதல் நிலைய ஊழியர் விபத்தில் பலி
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் நாடாகுடியை சேர்ந்தவர் செல்வம் (வயது50). இவர் கொல்லுமாங்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் செல்வம் திருவாரூர்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சென்றுள்ளார். அப்போது கொல்லுமாங்குடி பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இவரது மகள் சபீனா பேரளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்