search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகப்பேரில் லேத்பட்டறை உரிமையாளர் கொலை
    X

    முகப்பேரில் லேத்பட்டறை உரிமையாளர் கொலை

    முகப்பேரில் லேத்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் கலெக்டர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது70). லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா. இவர்களது மகன் அருள்ராஜ், மருமகள் ரூபி.

    ஏசுராஜன் வசிப்பது சொந்த வீடு ஆகும். முதல் தளத்தில் ஏசுராஜனும், கீழ் தளத்தில் அவரது மகளும் வசித்து வருகிறார்கள்.

    மகன் அருள்ராஜ் அதே தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏசுராஜனுக்கும் அவரது மனைவி கலாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

    ஏசுராஜனுக்கு அவரது மருமகள் ரூபி தினமும் 3 வேளையும் சாப்பாடு கொடுத்து வந்தார். இதனால் சொத்துக்களை ரூபி பெயரில் எழுதி வைத்து விடுவாரோ என்ற சந்தேகம் கலாவுக்கு இருந்தது.

    இதனால் கலா பலமுறை ஏசுராஜன் வீட்டுக்கு சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு பலமுறை தகராறு செய்து வந்தார். ஆனால் ஏசுராஜன் சொத்துக்களை பிரித்து கொடுக்க மறுத்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் கலா தனது தம்பி கோபாலுடன் சேர்ந்து ஏசு ராஜன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். திடீரென்று தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி கலா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். கோபால் மட்டும் ஏசுராஜனிடம் சொத்துக்களை தனது அக்காள் பெயருக்கு மாற்றி எழுதித் தருமாறு தகராறு செய்தார். ஆனால் அவர் சொத்துக்களை கொடுக்க மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கோபால் கத்தியால் ஏசுராஜனின் தொண்டை, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் குடல்சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் கோபால் தப்பி ஓடிவிட்டார்.

    இரவு 11 மணி அளவில் கலா ஆஸ்பத்திரியில் இருந்து ஏசுராஜன் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏசுராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுரேந்திரா வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தார். கலாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×