search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன் லாரி மோதி பலி
    X

    மீஞ்சூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன் லாரி மோதி பலி

    மீஞ்சூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இரவது மகன் கார்த்திக் (23) வட சென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    மீஞ்சூரை அடுத்த நாலூர் ஏரிக்கரை அருகே வரும்போது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×