search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை - கலெக்டர் பேட்டி
    X

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை - கலெக்டர் பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SterliteProtest #NGT


    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

    மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உடனடியாக மின்இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்று தான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதிகாக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #SterliteProtest #NGT

    Next Story
    ×