search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் குடிபோதையில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்த வாலிபர்
    X

    பண்ருட்டியில் குடிபோதையில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்த வாலிபர்

    பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குடிபோதையில் புகுந்து ரகளை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி விளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் நேற்று பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள வார்டு மேலாளர் அறைக்கு சென்று அங்கு பணியில் இருந்த முரளி என்பவரிடம் தனக்கு காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் எனகூறி ரகளை செய்தார். அவரை பணி செய்யவிடமால் தடுத்தார்.

    அப்போது சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.மேலும் அவர்அங்கு நின்ற நோயாளிகளிடமும் வாக்குவாதம் செய்து ரகளை செய்தார்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முரளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்த சுதாகரை தேடி வருகிறார்கள்.  #tamilnews
    Next Story
    ×