என் மலர்
நீங்கள் தேடியது "panruti government hospital"
- நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
- டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
கடலூர்:
கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் கொடுக்கும் பணியாளர் நீண்ட நேரமாக பணியில் இல்லாததால் நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
டோக்கன் கொடுப்பவர் வெளியே சென்றுள்ளதாக கூறிய தூய்மைப்பணியாளர், தொடர்ந்து அநாகரிகமாக பேசினார்.
கேள்வி கேட்ட நோயாளிக்கு, ஒருமையிலும் திமிராகவும் தூய்மைப் பணியாளர் பதில் அளித்தார்.
சிஎம் செல்லுக்கு போன் செய்து கூறுவதாக அந்த நோயாளி கூற,
நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
100-க்கு போன் செய்தால் போலீஸ் வரும் என்று அவர் கூற...
100 போலீஸ்... 2000 போலீஸ் பார்ப்பேன் என்று அந்த தூய்மைப்பணியாளர் கூறுகிறார்.
டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி விளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் நேற்று பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்குள்ள வார்டு மேலாளர் அறைக்கு சென்று அங்கு பணியில் இருந்த முரளி என்பவரிடம் தனக்கு காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் எனகூறி ரகளை செய்தார். அவரை பணி செய்யவிடமால் தடுத்தார்.
அப்போது சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.மேலும் அவர்அங்கு நின்ற நோயாளிகளிடமும் வாக்குவாதம் செய்து ரகளை செய்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முரளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்த சுதாகரை தேடி வருகிறார்கள். #tamilnews






