search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு
    X

    மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு

    மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் புதுராம்நாட் ரோட்டைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி பானுமதி. இவர் நேற்று மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பானுமதியை பின்தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பானுமதியை மறித்து கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    தத்தனேரி மெயின் ரோட்டில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயப் பிரபா (வயது 33). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெயப்பிரபாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    2 சம்பவங்கள் குறித்தும் தெப்பக்குளம், செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×