என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்2 Dec 2018 11:41 AM GMT (Updated: 2 Dec 2018 11:41 AM GMT)
மதுரை அருகே காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலமேடு:
மதுரை பாலமேடு அருகிலுள்ள கீழச்சின்னாம் பட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி பிச்சையம்மாள் (வயது 65). இவர் பாலமேடு சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். கீழச்சின்னம்பட்டி ரோட்டில் வந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சையம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டார்.
இது தொடர்பாக பிச்சையம்மாள் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X