search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி அருகே பனி மூட்டம் காரணமாக லாரிகள் மோதி விபத்து- டிரைவர் காயம்
    X

    சூளகிரி அருகே பனி மூட்டம் காரணமாக லாரிகள் மோதி விபத்து- டிரைவர் காயம்

    சூளகிரி அருகே இன்று அதிகாலை கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சூளகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்திற்கு வண்டியின் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்த லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு தேசிய நெடுஞ்சாலை பகுதி அருகே வந்தபோது ஒரே பனி மூட்டமாக இருந்தது. அப்போது ரோட்டோரம் ஜெகதேவியில் இருந்து சூளகிரிக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூளகிரி பகுதி முழுவதுமாக இன்று காலை வரை சாலையில் எதிரே வருபவர்களை யார் என்ற தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது சங்கர் ஓட்டி வந்த லாரியில் விளக்கு எரியவிட்டபடி வந்தும், ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் சரிவர தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    Next Story
    ×