search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
    X

    குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

    சென்னையில் தயா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற விழிப்ப்ணர்வு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்காலம் என தெரிவித்தார். #DhayaFoundation #Rajinikanth #LathaRajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், ‘தயா’ பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமாக லதா ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

    குழந்தைகள் மீது அதிக பிரியம் உடையவர் லதா. குழந்தைகளுக்கு நிம்மதி வேண்டி இந்த சேவையை துவங்கி இருக்கிறார். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம்.

    பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள். மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்கு அதிக நிதியை செலவு செய்கின்றனர். குழந்தைகள் நலனை மத்திய அரசும் கவனிக்கவில்லை, மாநில அரசும் கவனிக்கவில்லை.

    சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்துவதில்லை. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம்.

    குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கு பின் ஒரு பெரிய மாஃபியா இருக்கிறது. குழந்தையை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் புதிய செயலியை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். #DhayaFoundation #Rajinikanth #LathaRajinikanth 
    Next Story
    ×