search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.4½ லட்சம் தங்கம் பறிமுதல்
    X

    மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.4½ லட்சம் தங்கம் பறிமுதல்

    மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.4½ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் போதிய ஆவணங்கள் இன்றி 8 லேப்-டாப் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.

    மேலும் நடவடிக்கையிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அஷ்ரப்பை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

    இதில் அவர் அணிந்து இருந்த காலணியில் மறைத்து வைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    மொத்தம் அதில் 150 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். தங்க கட்டிகளையும், லேப்-டாப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அஷ்ரப்பிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×