search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- விவசாயி மீது வழக்கு
    X

    திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- விவசாயி மீது வழக்கு

    திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் கடைக்கு சென்ற சிறுமியை திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம்(வயது 59) என்பவர், வழிமறித்து அருகில் வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி சண்முகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×