search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள பொதும்பு காந்திஜி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரி மகன் சங்கையா (வயது19). இவர் சோழவந்தான் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

    அந்த பெண்ணின் பெற்றோர் சென்னையில் வசிக்கின்றனர். எனவே சோழவந்தானில் பாட்டி வீட்டில் அந்த பெண் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சங்கையா அங்கு தனியாக இருந்த அவரை கற்பழித்தார். இதில் அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுகுறித்து பெண்ணின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (38). இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    அதே பகுதியில் வசிக்கும் அய்யாவு மகன் மூர்த்தி (24) என்பவர் நான் உங்களின் மகளை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டார். இதற்கு வெள்ளைச்சாமி மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை வலுத்தது.

    அப்போது மூர்த்தி உருட்டுக்கட்டையால் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவியை தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளைச்சாமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×