என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலையில் 2 பெண்கள் திடீர் கைது
Byமாலை மலர்8 Nov 2018 9:50 AM GMT (Updated: 8 Nov 2018 9:50 AM GMT)
சென்னை மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்ட விபசார அழகி வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் மதுரையைச் சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி கடந்த 4-ந்தேதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம் குமார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் விபசார அழகி கலைச்செல்வி கொலையில் மேலும் 2 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர்கள் சந்தியா (19), ஷீலாபிரியா (26). இவர்கள் இருவருமே விபசார அழகிகள்.
இவர்களுக்கும், பிரேம் குமார், சூர்யாவுக்கும் பழக்கம் இருந்து வந்தது. கலைச்செல்வி மதுரையில் இருந்து இங்கு வந்து விபசாரம் செய்ய தொடங்கிய பிறகு சந்தியா, ஷீலாபிரியா இருவருக்கும் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே அவர்கள் பிரேம்குமார், சூர்யாவை சந்தித்து கலைச்செல்வியை தீர்த்துக் கட்டுமாறு கூறி உள்ளனர். அதன்பேரில் கடந்த 4-ந்தேதி அவர்கள் மெரினா கடற்கரையில் கலைச்செல்வியை கொலை செய்தது தெரிய வந்தது.
கொலை நடந்தபோது சந்தியா, ஷீலாபிரியா இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சந்தியா, ஷீலாபிரியா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மதுரையைச் சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி கடந்த 4-ந்தேதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம் குமார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் விபசார அழகி கலைச்செல்வி கொலையில் மேலும் 2 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர்கள் சந்தியா (19), ஷீலாபிரியா (26). இவர்கள் இருவருமே விபசார அழகிகள்.
இவர்களுக்கும், பிரேம் குமார், சூர்யாவுக்கும் பழக்கம் இருந்து வந்தது. கலைச்செல்வி மதுரையில் இருந்து இங்கு வந்து விபசாரம் செய்ய தொடங்கிய பிறகு சந்தியா, ஷீலாபிரியா இருவருக்கும் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே அவர்கள் பிரேம்குமார், சூர்யாவை சந்தித்து கலைச்செல்வியை தீர்த்துக் கட்டுமாறு கூறி உள்ளனர். அதன்பேரில் கடந்த 4-ந்தேதி அவர்கள் மெரினா கடற்கரையில் கலைச்செல்வியை கொலை செய்தது தெரிய வந்தது.
கொலை நடந்தபோது சந்தியா, ஷீலாபிரியா இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சந்தியா, ஷீலாபிரியா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X