search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பூட்டிய வீடுகளில் 38 பவுன் நகை திருட்டு
    X

    கோவையில் பூட்டிய வீடுகளில் 38 பவுன் நகை திருட்டு

    கோவையில் பூட்டிய வீடுகளில் 38 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மதுரை சென்றார். நேற்று வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 25 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற் கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை வெள்ளலூர் ரோடு, கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பிய போது முன்கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×