search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி - பன்றிகாய்ச்சலால் பாதித்த 2 பெண்களுக்கு சிகிச்சை
    X

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி - பன்றிகாய்ச்சலால் பாதித்த 2 பெண்களுக்கு சிகிச்சை

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
    சென்னை:

    சென்னையில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குமுதா (23), ராயபுரத்தை சேர்ந்த பூங்காவனம் (26) ஆகியோர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனிமையான வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மருத்துவமனை டீன் பொன்னப்ப நமச்சிவாயம் தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 82 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

    எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Swineflu
    Next Story
    ×