search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி பெண் மாயம்
    X

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி பெண் மாயம்

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கனகலட்சுமி கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கனகலட்சுமி திரும்பி வர வில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×