search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×