search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
    X

    மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

    மதுரையில் பட்டப் பகலில் வீடு புகுந்து நகை கெள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தனக்கன்குளம் அருகிலுள்ள புளியங்குளம் வி.பி.சிந்தன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் நேற்று மதியம் தேவாலயத்திற்கு சென்று விட்டார்.

    அப்போது யாரோ சிலர் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    தேவாலயத்தில் வழிபாடு முடித்து விட்டு வீடு திரும்பிய ஜெயபிரகாஷ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக ஜெய பிரகாஷ் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×