search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயம்
    X

    ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயம்

    ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் நிவேதா (வயது 21) என்ஜினீயர். இவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிவிட்டு நேற்று கடைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் மனோகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் என்ஜினீயரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×