என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட வேண்டும்- நேரு பேச்சு
திருவாரூர்:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் அதனை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குசாவடி முகவர் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன்படி கொரடாச்சேரி நகர, ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உ.மதிவாணன், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தாழை அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசும்போது கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற தொகுதியானது தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் தொகுதியாகும். திருவாரூர் தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பயன்தர தக்க பணிகளை தலைவர் கருணாநிதி செய்துள்ளார். வரவுள்ள இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எப்போது தேர்தல் அறிவித்தாலும் வெற்றியை எளிதாக பெறும் வகையில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விடவேண்டும். வாக்குசாவடி முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்காளர்களை சந்தித்து நமது வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #thiruvarurelection #dmk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்