என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
Byமாலை மலர்23 Sep 2018 4:41 PM GMT (Updated: 23 Sep 2018 4:41 PM GMT)
மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைதுசெய்யப்பட்டார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.
மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.
மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X