search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killing peacocks"

    • தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது.
    • இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே நடுவலூர் வடக்கு கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது. இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அப்போது பக்கத்து தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள நிலை யில் பயிரை காப்பதற்காக சுற்றிலும் குருணை மருந்து வைத்திருந்ததும், அதனை சாப்பிட்டு மயில்கள் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக பரம சிவம் என்பவர் மீது வன குற்றவியல் பிரிவின்கீழ் வனத்துறையினர் வழக்குப்ப திவு செய்துள்ள னர். இதை யடுத்து, தலை மறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைதுசெய்யப்பட்டார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

    கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.

    மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


    போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ×