search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கவல்லி அருகே விஷம் வைத்து 3 மயில்கள் சாகடிப்பு
    X

    கெங்கவல்லி அருகே விஷம் வைத்து 3 மயில்கள் சாகடிப்பு

    • தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது.
    • இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே நடுவலூர் வடக்கு கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது. இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அப்போது பக்கத்து தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள நிலை யில் பயிரை காப்பதற்காக சுற்றிலும் குருணை மருந்து வைத்திருந்ததும், அதனை சாப்பிட்டு மயில்கள் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக பரம சிவம் என்பவர் மீது வன குற்றவியல் பிரிவின்கீழ் வனத்துறையினர் வழக்குப்ப திவு செய்துள்ள னர். இதை யடுத்து, தலை மறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×