search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியுடன் சேர்த்து வைக்க கோரி கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர்
    X

    காதலியுடன் சேர்த்து வைக்க கோரி கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர்

    கரூர் போலீஸ் நிலையத்தில் காதலியுடன் சேர்த்து வைக்க கோரி வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபிநாத் (வயது 24), சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கல்லூரி மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சம டைந்தனர்.

    அதனை தொடர்ந்து இருவரின் வீட்டில் இருந்தும் பெற்றோர்களை அழைத்து கரூர் டி.எஸ்.பி கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த கோபிநாத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வெளியேறினார்.

    பின்னர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து எங்களை வாழவிடவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தார். மேலும் தனது கழுத்தின் பின்பகுதியை கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    இதனை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவர் மேலும் கழுத்தை அறுக்காமல் கத்தியை பறித்தனர். மேலும் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரூர் நகர காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×