search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலில் நடனம் ஆடிய போது பெண்ணிடம் அத்துமீறல் - டாக்டர், மருத்துவ மாணவர் கைது
    X

    ஓட்டலில் நடனம் ஆடிய போது பெண்ணிடம் அத்துமீறல் - டாக்டர், மருத்துவ மாணவர் கைது

    புதுவைக்கு சுற்றுலா வந்த வடமாநில பெண் தனது நண்பர்களுடன் ஓட்டலில் நடனம் ஆடியபோது செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர், மருத்துவ மாணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவைக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, பெங்களூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று கண்டுகளிப்பது வழக்கம். மேலும் ஓட்டல்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

    அதுபோல் நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது ஆண் நண்பர்களுடன் புதுவை கடற்கரையையொட்டி உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டு இருந்தார்.

    அப்போது சில வாலிபர்கள் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக்கேட்ட போது அவர்களை அந்த வாலிபர்கள் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதுபற்றி அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ நடந்த ஓட்டலுக்கு விரைந்து செல்வதற்குள் அந்த வாலிபர்கள் ஓட்டலில் இருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் அடையாளம் தெரிந்தது. அதில் புதுவையில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது25) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எழிலரசு (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து புதுவையில் மற்றொரு ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×