search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூத்தாநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை
    X

    கூத்தாநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

    கூத்தாநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவினூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுரேஷ் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் அவர் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது சம்மந்தமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த விஜயராணி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விஜயராணி அண்ணன் பாஸ்கர் கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விஜயராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×