search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின் தலைமையில் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்திட வேண்டும் - கூட்டத்தில் தீர்மானம்
    X

    ஸ்டாலின் தலைமையில் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்திட வேண்டும் - கூட்டத்தில் தீர்மானம்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்திட வேண்டும் என்று நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.நடனசபாபதி, துணைச் செயலாளர்கள் எஸ்.சேகர், எம்.செல்வராஜ், சுகந்திமணியம், பொருளாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    * தலைவர் கருணாநிதியை தொடர்ந்து, கட்சியை கட்டி காத்திட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் தான் முடியும், அவர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர் கருணாநிதி வழியில் தொடர்ந்து பணியாற்றி தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்திட வேண்டும்.

    * தி.மு.க. செயல் தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட கழகத்தின் மூலமாக அதிகப்படியான நிவாரண பொருட்களை வழங்குவது.

    * தலைவர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய தலைவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழகம் சார்பில் திரளாக பங்கேற்க வேண்டும்.

    * மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளையின் சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ,மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளை பங்குபெற வைப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×