search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார்
    X

    வேதாரண்யம் அருகே ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார்

    வேதாரண்யம் அருகே முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகள் குணவதி (38). இவருக்கும் தென்னம்புலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கும் 3.3.14 அன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் ஊரில் தங்கி விட்டு ரவிச்சந்திரன் மலேசியா சென்று விட்டார். இந்த நிலையில் குணவதி தன் கணவர் ரவிச்சந்திரன் முதல் திருமணம் செய்து கொண்டதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆகவே அவர் மீதும், அவரை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

    புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், செல்வராஜ், காமேஸ்வரத்தைச் சேர்ந்த அமுதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×