என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு - தந்தையை செருப்பால் அடித்த விவசாயி கைது
Byமாலை மலர்16 Aug 2018 11:15 AM GMT (Updated: 16 Aug 2018 11:15 AM GMT)
தாரமங்கலம் அருகே 2-வது திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தையை செருப்பால் அடித்ததால் விவசாயி கைது செய்யப்பட்டார்.
சேலம்:
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் ரம்யா (வயது 23) என்பவரை 2-வதாக திருமணம் செய்ய பெண் கேட்டார். அப்போது மாரியப்பன் தனது மகளை 2-வதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறினார்.
உடனே வைரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களது மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டதற்கு வயது குறைவாக இருப்பதால் திருமணம் செய்து தர முடியாது என்று கூறினீர்கள், தற்போது 2-வது திருமணத்திற்கு பெண் தர முடியாது என்று செல்கிறீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வைரமணி, மாரியப்பனை செருப்பால் அடித்தார். மேலும் ரம்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ரம்யா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X