என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்13 Aug 2018 11:58 AM GMT (Updated: 13 Aug 2018 11:58 AM GMT)
திருப்பதியில் காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
திருப்பதி சிவஜோதி நகரை சேர்ந்தவர் கீதிகா (வயது19). திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி மாணவி கீதிகா நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி போலீசார் மாணவியின உடலை மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் பிரதியும்னா கூடுதல் இணை கலெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ரூயா ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்த கல்லூரி மாணவியும், வங்கியில் பணிபுரியும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வங்கி ஊழியர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். இது மாணவிக்கு தெரிய வரவே மாணவி விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
இதே கல்லூரியில் எம்.டி. படித்து வந்த டாக்டர் ஷில்பா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணையே தொடங்கவில்லை. இந்நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி சிவஜோதி நகரை சேர்ந்தவர் கீதிகா (வயது19). திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி மாணவி கீதிகா நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி போலீசார் மாணவியின உடலை மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் பிரதியும்னா கூடுதல் இணை கலெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ரூயா ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்த கல்லூரி மாணவியும், வங்கியில் பணிபுரியும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வங்கி ஊழியர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். இது மாணவிக்கு தெரிய வரவே மாணவி விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
இதே கல்லூரியில் எம்.டி. படித்து வந்த டாக்டர் ஷில்பா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணையே தொடங்கவில்லை. இந்நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X