search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicde"

    திருப்பதியில் காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி சிவஜோதி நகரை சேர்ந்தவர் கீதிகா (வயது19). திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்லூரி மாணவி கீதிகா நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி போலீசார் மாணவியின உடலை மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் பிரதியும்னா கூடுதல் இணை கலெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ரூயா ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தற்கொலை செய்த கல்லூரி மாணவியும், வங்கியில் பணிபுரியும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வங்கி ஊழியர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். இது மாணவிக்கு தெரிய வரவே மாணவி விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    இதே கல்லூரியில் எம்.டி. படித்து வந்த டாக்டர் ஷில்பா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து விசாரணையே தொடங்கவில்லை. இந்நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×