என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
Byமாலை மலர்9 Aug 2018 7:43 AM GMT (Updated: 9 Aug 2018 7:43 AM GMT)
கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. மலைப்பகுதியில் உணவுதேடி இடம்பெயரும் போது வழிமாறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பல்வேறு இன்னல்களுக்கிடையே காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு இது மேலும் பேரிடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் சவ்சவ், காலிபிளவர், உருளை, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவைகளை பயிரிட்டனர்.
இப்பயிர்கள் செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இன்று காலை பெருமாள்மலை அருகே உள்ள பி.எல்.செட் பகுதியில் யானைகள் கூட்டமாக புகுந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின்பு அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளை நாசப்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யானைகள் தொல்லையால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. மலைப்பகுதியில் உணவுதேடி இடம்பெயரும் போது வழிமாறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பல்வேறு இன்னல்களுக்கிடையே காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு இது மேலும் பேரிடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் சவ்சவ், காலிபிளவர், உருளை, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவைகளை பயிரிட்டனர்.
இப்பயிர்கள் செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இன்று காலை பெருமாள்மலை அருகே உள்ள பி.எல்.செட் பகுதியில் யானைகள் கூட்டமாக புகுந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின்பு அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளை நாசப்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யானைகள் தொல்லையால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X