என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கச் சிலை மோசடி வழக்கு- அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்
Byமாலை மலர்7 Aug 2018 7:02 AM GMT (Updated: 7 Aug 2018 7:30 AM GMT)
தங்கச் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
சென்னை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை (52) கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி கவிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து இன்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை (52) கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி கவிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து இன்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X