search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Endowments Department officer Kavitha"

    தங்கச் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    சென்னை:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு  தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை (52) கைது செய்தனர்.

    இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி கவிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையடுத்து இன்று உத்தரவு பிறப்பித்த  உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    ×