search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருகிறது - கமல்ஹாசன் சாடல்
    X

    இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருகிறது - கமல்ஹாசன் சாடல்

    ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக தெரிவித்துள்ளார். #KamalHassan
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு விடையளித்த மக்கள் நீதிமய்ய தலைவர்  கமல்ஹாசன், காவிரி நதிநீர் ஆணையத்தை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், பசுமை வழிச்சாலை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திட்டங்கள் தேவையா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ விமானத்தை வழங்கியது குறித்து இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #KamalHassan
    Next Story
    ×