என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகள் கைது
Byமாலை மலர்6 July 2018 9:55 AM GMT (Updated: 6 July 2018 9:55 AM GMT)
சென்னை கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பட்டா கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் மேட்டுக்குப்பம் தேவி கருமாரி அம்மன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இரண்டு பட்டா கத்தியையும் அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தாலப்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்கிற மூர்த்தி, கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. #Tamilnews
கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் மேட்டுக்குப்பம் தேவி கருமாரி அம்மன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இரண்டு பட்டா கத்தியையும் அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தாலப்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்கிற மூர்த்தி, கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X