search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதி விபத்து: பெண் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதி விபத்து: பெண் பலி

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

    இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள பூதிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, சாலையின் ஓரம் மொபட்டில் நின்று கொண்டிருந்த கங்கலேரி அண்ணா நகரை சேர்ந்த வெங்கடேஷ் (60) என்பவர், திடீரென சாலையின் குறுக்கே திரும்பியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக தேவேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜேஸ்வரி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×