search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வில் தோல்வி- பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    தேர்வில் தோல்வி- பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    பொன்னேரி அருகே தேர்வில் தோல்வியடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பெரியார் நகரைச்சேர்ந்தவர் மாரி. கூலித் தொழிலாளி. இவரது மகள் சுஜிதா (16) பொன்னேரி அடுத்த வேன் பாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் தேர்வில் சுஜிதா 3 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து வந்தார். இதனால் மன வேதனையடைந்த சுஜிதா கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்ட்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×