search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேர் கைது
    X

    கோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

    கோவையில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக மோட் டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது.

    குறிப்பாக காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, அரசு ஆஸ் பத்திரி முன்புறம், பீளமேடு, போத்தனூர் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தி செல்லும் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் நைசாக திருடி சென்றனர்.

    இதில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிள் திருடியதாக ரத்தினபுரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 22), சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் குமார்(22), சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த பாபு(27), ஜாகிர் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரும் லேத் வேலை செய்து வந்துள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

    இவர்கள் திருடும் மோட்டார் சைக்கிளின் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளை விற்பதன் மூலம் ரூ.10 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை கைது செய்த உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் பெருமாள் ஆகியோர் பாராட்டினர்.
    Next Story
    ×