search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்திய பேராசிரியர் முருகனின் வீடு.
    X
    சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்திய பேராசிரியர் முருகனின் வீடு.

    பேராசிரியர் முருகன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை

    மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையில் உள்ள பேராசிரியர் முருகன் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். #NirmalaDevi #Murugan
    மேலூர்:

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையில் சொர்ண மீனாள் நகரில் உள்ள முருகன் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நீடித்து வருகிறது. பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, வீட்டின் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.

    வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி அதை கிராம அதிகாரி முருகன் முன்னிலையில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது.  #NirmalaDeviAudio
    Next Story
    ×