என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராசிரியர் முருகன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை
Byமாலை மலர்27 April 2018 7:35 AM GMT (Updated: 27 April 2018 7:35 AM GMT)
மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையில் உள்ள பேராசிரியர் முருகன் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். #NirmalaDevi #Murugan
மேலூர்:
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையில் சொர்ண மீனாள் நகரில் உள்ள முருகன் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நீடித்து வருகிறது. பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, வீட்டின் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி அதை கிராம அதிகாரி முருகன் முன்னிலையில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது. #NirmalaDeviAudio
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையில் சொர்ண மீனாள் நகரில் உள்ள முருகன் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நீடித்து வருகிறது. பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, வீட்டின் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி அதை கிராம அதிகாரி முருகன் முன்னிலையில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது. #NirmalaDeviAudio
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X