என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா ரத்த மாதிரி- அப்போலோ மருத்துவமனை நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
Byமாலை மலர்25 April 2018 8:50 AM GMT (Updated: 25 April 2018 8:50 AM GMT)
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து அப்போலோ நிர்வாகம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. #AmruthaCase #JayaBloodSamples #Apollo
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மற்றும் உயிரியல் மாதிரிகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது. இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலா மருத்துவமனை தரப்பில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து பதில் அளிக்க மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. இளைஞரணி தரப்பில் இன்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக அம்ருதா வழக்கறிஞர் தெரிவித்தார்.#AmruthaCase #JayaBloodSamples #Apollo
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மற்றும் உயிரியல் மாதிரிகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது. இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலா மருத்துவமனை தரப்பில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து பதில் அளிக்க மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. இளைஞரணி தரப்பில் இன்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக அம்ருதா வழக்கறிஞர் தெரிவித்தார்.#AmruthaCase #JayaBloodSamples #Apollo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X