search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே பெண்ணை கொன்று செயின் பறித்த கொள்ளையன் கைது
    X

    திருவண்ணாமலை அருகே பெண்ணை கொன்று செயின் பறித்த கொள்ளையன் கைது

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று செயின் பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் நாடழ கானந்தல் கூட்ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி சகுந்தலா (வயது 58). டிபன் கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 20-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சகுந்தலாவை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை கொள்ளையடித்து தப்பினர்.

    இதில் படுகாயமடைந்த சகுந்தலா, வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இந்த மாதம் 1-ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து, வேட்டவலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், வேட்டவலம் அடுத்த சொரத்தூர் கூட்ரோடு பகுதியில் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த வாலிபரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். சின்னசேலம் நைனார் பாளையம் குளத்துமேட்டுத் தெருவை சேர்ந்த நல்லாப்பிள்ளை மகன் அழகர் (37) என்பதும், ஊர் ஊராக சென்று பிளாஸ்டிக்குடங்களை விற்பனை செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

    சகுந்தலா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அழகர் அவரை கொன்று நகையை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, கொள்ளையன் அழகரை கைது செய்த போலீசார், சகுந்தலா கொலையில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×